கோவையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம்

கோவையில் பல்வேறு இடங்களில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கொடியேற்றம், இனிப்பு வழங்குதல், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.


கோவை: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ஜி வி நவீன் குமார் தலைமையில் கோவையில் பல்வேறு இடங்களில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



குரும்ப்பாளையத்தில் ஓ பி சி மாநில பொதுச் செயலாளர் எஸ் எஸ் குளம் நாகராஜ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சரவணம்பட்டி காங்கிரஸ் அலுவலகத்தில் சரவணம்பட்டி ரகுராமன் முன்னிலையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. சரவணம்பட்டி பெரியார் நகரில் மாவட்ட செயலாளர் சாமுவேல் தாஸ் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.



விளாங்குறிச்சி காமராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளவை கோபால் முன்னிலையில் கொடியேற்றப்பட்டு, காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



விளாங்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



சேரன்மா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 10,000 மற்றும் ரூபாய் 5,000 நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.



அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.



வலியாம்பாளையம் மற்றும் சரவணம்பட்டி அரசு பள்ளிகளிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் சுந்தரசாமி, சின்னச்சாமி, சண்முகசுந்தரம், ரங்கசாமி, ரங்கநாதன், பாலு, முருகானந்தம், சுரேஷ், கார்த்திக், முரளி கிருஷ்ணன், விவேகானந்தன், கலைச்செல்வன், காசி, ராமலிங்கம், மாணிக்கம், பொன்னுச்சாமி, வேலுச்சாமி, ரவிக்குமார், ரமேஷ் குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...