கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் 80வது ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சங்கமம் கலைக்குழுவின் 80வது ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 6 முதல் 60 வயது வரையிலான 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் பங்கேற்றனர். நாட்டுப்புற கலையை வளர்க்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


Coimbatore: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சங்கமம் கலைக்குழுவின் 80வது ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.

நாட்டுப்புற கலையை வளர்க்கும் நோக்கில் சங்கமம் கலைக்குழு சார்பில் பல இடங்களில் ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நரசிம்மநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் 6 வயது முதல் 60 வயது வரையிலான 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியின் தொடக்கமாக, சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றினர், கலைஞர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர், மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நரசிம்மநாயக்கன்பாளையம் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கிய நிகழ்வு, முளைப்பாரி ஊர்வலத்துடன் விளையாட்டு திடலுக்கு சென்றது.

விளையாட்டு திடலில் இறைவணக்கத்துடன் சங்கமம் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் தலைமையில் துணை பயிற்சியாளர்கள் செல்வகுமார் கணேசன், மகேஸ்வரி செல்வகுமார், சந்தியா செல்வகுமார், விஜயமோகன் ஆகியோருடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் உறுதிமொழி ஏற்று ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.



கிராமிய பம்பை இசைக் கலைஞர்கள் சிவசக்தி சண்முகம், சிவகுகன் ஆகியோரின் இசையிலும், பாடகர் சின்னசாமியின் பாடலிலும் கோலாட்டம் மற்றும் கும்மியாட்டம் நடைபெற்றது. விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் ஜி மயில்சாமி கலந்துகொண்டு குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன், மாவட்ட கவுன்சிலர் எஸ்.கார்த்திக், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆனந்தன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பி.வி.மணி, பேரூராட்சி உறுப்பினர்கள், தொழில்நுட்ப கலைக்குழுவைச் சேர்ந்த மலர் மோகன், பெலிக்ஸ், மனோஜ் கனகராஜ், சுரேஷ், வேலவன், பிரபாகரன், புனிதவதி முத்துகுமார் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...