கோவை வீட்டை விட்டு வெளியேற நிர்பந்தம் - நரிக்குறவர் குடும்பம் தீக்குளிக்க முயற்சி

கோவையில் வீட்டை விட்டு வெளியேறுமாறு நிர்பந்திக்கப்பட்டதாக கூறும் நரிக்குறவர் குடும்பம் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது. போலீசார் தடுத்து நிறுத்தினர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி குள்ளக்காபாளையத்தைச் சேர்ந்த சுஜாதா என்ற நரிக்குறவர் பெண்ணின் தங்கை, வேறு இனத்தைச் சேர்ந்த விஜில்குமாரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், விஜில்குமார் சுஜாதா மற்றும் அவரது குடும்பத்தினரை அவர்களுக்கு சொந்தமான வீட்டில் வசிக்க விடாமல், வெளியேறுமாறு நிர்பந்தித்துள்ளார்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சுஜாதா தனது குடும்பத்தினருடன் பேருந்து நிலையத்தில் தங்கி வந்துள்ளார். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



இன்று, தங்கள் வீட்டிற்கு சொந்தமான உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சுஜாதாவும் அவரது குடும்பத்தினரும், தங்கள் வீட்டை மீட்டுத் தரக்கோரி, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...