கோவை வீட்டை விட்டு வெளியேற நிர்பந்தம் - நரிக்குறவர் குடும்பம் தீக்குளிக்க முயற்சி

கோவையில் வீட்டை விட்டு வெளியேறுமாறு நிர்பந்திக்கப்பட்டதாக கூறும் நரிக்குறவர் குடும்பம் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது. போலீசார் தடுத்து நிறுத்தினர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி குள்ளக்காபாளையத்தைச் சேர்ந்த சுஜாதா என்ற நரிக்குறவர் பெண்ணின் தங்கை, வேறு இனத்தைச் சேர்ந்த விஜில்குமாரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், விஜில்குமார் சுஜாதா மற்றும் அவரது குடும்பத்தினரை அவர்களுக்கு சொந்தமான வீட்டில் வசிக்க விடாமல், வெளியேறுமாறு நிர்பந்தித்துள்ளார்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சுஜாதா தனது குடும்பத்தினருடன் பேருந்து நிலையத்தில் தங்கி வந்துள்ளார். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



இன்று, தங்கள் வீட்டிற்கு சொந்தமான உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சுஜாதாவும் அவரது குடும்பத்தினரும், தங்கள் வீட்டை மீட்டுத் தரக்கோரி, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...