கோவை மருதமலை கோயில் பாதையில் குட்டிகளுடன் கடந்து செல்லும் யானைக் கூட்டம்: வைரலாகும் வீடியோ

கோவை மருதமலை கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் குட்டிகளுடன் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையைக் கடந்து சென்றன. இந்த காட்சியை பக்தர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.


கோவை: கோவை மருதமலை கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் குட்டிகளுடன் காட்டு யானைக் கூட்டம் சாலையைக் கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மருதமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வடவள்ளி, ஐ.ஓ.பி காலனி, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது ஊர்களுக்குள் வந்து செல்வது வழக்கமாகிவிட்டது.

கடந்த சில நாட்களாக ஒற்றை யானை மற்றும் இரண்டு காட்டு யானைகள் மருதமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டு பாதை மற்றும் மலைச் சாலையில் கடந்து சென்று வந்தன. இந்நிலையில், ஜூலை 11 அதிகாலை பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் மருதமலை மலைச் சாலையைக் கடந்து சென்றுள்ளன.

இந்தக் காட்சியை கோயிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், வனத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...