குறைந்தபட்ச ஊதியம் கோரி ஏஐடியுசி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவையில் ஏஐடியுசி சார்பில் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை சிவானந்தா காலனியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில செயலாளரும், வால்பாறை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான ஆறுமுகம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இப்போராட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.

கிராம உள்ளாட்சிகளில் மக்களின் அடிப்படை அத்தியாவசிய பணிகளில் கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என 2017-ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

முன்தேதியிட்டு நிலுவையிலுள்ள பணப்பலன்களை வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து, கோவை தொழிலாளர் கூடுதல் இணை ஆணையரிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்த மனுவில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டது. மனு அளித்த பின்னர் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...