கோயம்புத்தூர் கற்பகம் பல்கலையில் 'துளிர்-2024' வரவேற்பு விழா

கோயம்புத்தூர் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 'துளிர்-2024' வரவேற்பு விழா ஜூலை 3 முதல் 9 வரை நடைபெற்றது. மாணவர்களின் வளர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கம் குறித்து பல்வேறு தலைவர்கள் உரையாற்றினர்.


கோவை: கோயம்புத்தூர் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் 'துளிர்–2024' விழா ஜூலை 3, 4, 5 மற்றும் 8, 9 ஆகிய ஐந்து நாட்கள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புல முதன்மையர் முனைவர் நா.வெ. பாலாஜி வரவேற்புரை வழங்கினார்.

கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் Dr. இராச. வசந்தகுமார் தமது தலைமையுரையில், "நவீனத் தொழில்நுட்பம் மிக்க நாடுகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் வளர்ச்சி மாணவர்களின் அயராத உழைப்பில் இருக்கிறது. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் விளங்க வேண்டும். திருக்குறளை வாழ்வியல் நூலாகக் கொள்ள வேண்டும்" என்று சிறப்புரை வழங்கினார்.



ஐந்தாம் நாள் (09.07.2024) நிகழ்வில் இன்போசிஸ் நிறுவனத்தின் AVP & HR லீடர், 'மாற்றம்' அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜே. சுஜித் குமார் சிறப்புரை வழங்கினார்.



அவர், "மாணவர்கள் தங்களது குறிக்கோளைத் திட்டமிட்டு, காலத்தை முறையாகப் பயன்படுத்தி, தன்னம்பிக்கையோடு தொடர்ந்து முயன்றால் வெற்றி உறுதி" என்று அறிவுறுத்தினார்.

கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் கே.இராமசாமி, "மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைப் பயின்று வெற்றி பெற வேண்டும்" என்று வலியுறுத்தினார். துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி, தாய்நாட்டின் பெருமை, மாணவர்களின் கடமை, மாணவர்களின் நலனுக்காக பெற்றோர்களின் உழைப்பு, வெற்றியின் மீதான மன ஒருமைப்பாட்டின் இன்றியமையாமை ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

விழாவின் நிறைவாக மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப. தமிழரசி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...