கோவை வடசித்தூர் அருகே சரக்கு வாகன ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை: நெகமம் போலீசார் விசாரணை

கோவை வடசித்தூர், செட்டிபாளையம் சாலையில் சரக்கு வாகன ஓட்டுநர் பிரபாகரன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். நெகமம் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


Coimbatore: கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் (32) என்பவர் சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டி வந்தார். ஜூலை 5 அன்று, சரக்கு வண்டி வாடகைக்கு வேண்டும் என்று கூறி இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர்.


வடசித்தூர், செட்டிபாளையம் சாலையில் சரக்கு வாகனத்தில் செல்லும் போது, திடீரென அந்த இரண்டு நபர்கள் பிரபாகரனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். சாலையில் நடுவில் நீண்ட நேரமாக சரக்கு வாகனம் நின்றதால், அவ்வழியே சென்றவர்கள் சிலர் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை எட்டிப் பார்த்தனர்.


ஓட்டுநர் கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நெகமம் போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...