சரவணம்பட்டியில் போக்கியத்துக்கு வீடு தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி

கோவை சரவணம்பட்டியில் போக்கியத்துக்கு வீடு தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை சரவணம்பட்டி தச்சன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் (56) மற்றும் அவரது மனைவி குணசுந்தரி (54) ஆகியோர் போக்கியத்துக்கு வீடு தேடி வந்தனர். அப்போது, கோவை தெற்கு அருணாசலம் காலனியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் சரவணம்பட்டி மஹா நகரில் உள்ள வீட்டை போக்கியத்துக்கு விடுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, குணசுந்தரி ஏப்ரல் 24-ஆம் தேதி ராஜசேகரிடம் ரூ.10 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட ராஜசேகர் வீட்டை ஒப்படைக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக குணசுந்தரி ஜூலை 4-ஆம் தேதி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...