பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு புதிய நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையத்தை மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில், பொள்ளாச்சி எம்.பி. கே. ஈஸ்வரசாமி திறந்து வைத்தார்.

கோவை: கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு புதிய நியாயவிலைக் கடைகள் மற்றும் ஒரு புதிய அங்கன்வாடி மையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தெற்கு மண்டலம், வார்டு எண் 91-இல் உள்ள சுகுணாபுரம் மேற்கு கல்கி கார்டன் பகுதியில், எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை, மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடை பொருட்களும் வழங்கப்பட்டன.



இதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம், வார்டு எண் 73-இல் உள்ள பொன்னையராஜபுரம் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மற்றொரு நியாயவிலைக் கடையும், வார்டு எண் 72-இல் உள்ள அருணாசலம் வீதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையமும் திறந்து வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.57 லட்சம் மதிப்பிலான இந்த மூன்று திட்டங்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டன.



நிகழ்ச்சியில் துணை மேயர் ரா. வெற்றிச்செல்வன், மேற்கு மண்டலத் தலைவர் தெய்வானை தமிழ்மறை, நகரமைப்புக் குழுத் தலைவர் சந்தோஷ், உதவி ஆணையர்கள் டட்சிணாமூர்த்தி (தெற்கு), நர்மதா (மேற்கு), மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...