பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு புதிய நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையத்தை மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில், பொள்ளாச்சி எம்.பி. கே. ஈஸ்வரசாமி திறந்து வைத்தார்.

கோவை: கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு புதிய நியாயவிலைக் கடைகள் மற்றும் ஒரு புதிய அங்கன்வாடி மையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தெற்கு மண்டலம், வார்டு எண் 91-இல் உள்ள சுகுணாபுரம் மேற்கு கல்கி கார்டன் பகுதியில், எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை, மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடை பொருட்களும் வழங்கப்பட்டன.



இதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம், வார்டு எண் 73-இல் உள்ள பொன்னையராஜபுரம் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மற்றொரு நியாயவிலைக் கடையும், வார்டு எண் 72-இல் உள்ள அருணாசலம் வீதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையமும் திறந்து வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.57 லட்சம் மதிப்பிலான இந்த மூன்று திட்டங்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டன.



நிகழ்ச்சியில் துணை மேயர் ரா. வெற்றிச்செல்வன், மேற்கு மண்டலத் தலைவர் தெய்வானை தமிழ்மறை, நகரமைப்புக் குழுத் தலைவர் சந்தோஷ், உதவி ஆணையர்கள் டட்சிணாமூர்த்தி (தெற்கு), நர்மதா (மேற்கு), மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...