கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: சூலூர் பீடம்பள்ளி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், பீடம்பள்ளி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் இடம் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். திட்டத்தின் கீழ் சூலூர் வட்டாரத்தில் 16 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், பீடம்பள்ளி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் இடம் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஜூலை 3) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக எஸ்ஐஎச்எஸ் காலனியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், மேம்பாலப் பணிகளை இரண்டு மாத காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஒப்பந்ததாரர் மீது மேல்நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.



கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் நோக்கம், ஊரகப் பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதாகும். குடிசையில் வசிப்பவர்கள், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் என ஏழை, எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊரக வளர்ச்சி முகமை மூலமாக பாதுகாப்பான வீடுகள் கட்டி வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி பரப்பளவில், அறை, சமையலறை, கழிப்பறை வசதிகளுடன் ரூ.3.50 இலட்சம் செலவில் அமைக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் சூலூர் வட்டாரத்தில் 16 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் பீடம்பள்ளியில் ஒரு பயனாளியும், பட்டணத்தில் 3 பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று பீடம்பள்ளி ஊராட்சி, நடுப்பாளையம் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முருகன், சரஸ்வதி, தங்கம்மாள் ஆகியோர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டது குறித்தும், இடம் தேர்வு தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...