கோவையில் கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கியுடன் சுற்றிய நான்கு பேர் கைது

ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி துப்பாக்கியுடன் சென்ற நான்கு பேரை சொக்கம்புதூர்-முத்தண்ணன் குளத்து சாலையில் போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: கோவை, சொக்கம்புதூரில் இருந்து முத்தண்ணன் குளத்துக்கு செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் போலீஸார் ஜூன்.24 ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 4 போ், போலீஸாரை பார்த்ததும் தப்பிச் செல்ல முயன்றனா். இதையடுத்து அவா்களை போலீஸார் விரட்டிப் பிடித்தனா்.

விசாரணையில், செல்வபுரம் வடக்கு ஹவுஸிங் யூனிட்டை சோ்ந்த சஞ்சய்குமார்(24), தீத்திபாளையத்தைச் சோ்ந்த ஜலாலுதீன் (50), இடையா்பாளையத்தைச் சோ்ந்த சரவணகுமார் (40), செல்வபுரத்தைச் சோ்ந்த சல்புல்கான்(40) என்பது தெரியவந்தது.



இதில் சஞ்சய்குமாரிடம் தோட்டா இல்லாத துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனா். பின்னர் இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘பிடிபட்ட 4 பேரும் ரௌடி சஞ்சய் ராஜாவின் குழுவைச் சோ்ந்தவா்கள். ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு சென்றுகொண்டிருந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து துப்பாக்கி, கத்தி, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...