கள்ளக்குறிச்சி விவகாரத்தை மையப்படுத்தி பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கோவை சாலை, பாலக்காடு சாலை, மத்திய பேருந்து நிலையம், கடைவீதி என முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்த மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுதோறும் போதை பொருள் பயன்பாடு தொடர்பாக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தி வருகிறது. இந்த உயிரிழப்பு விவகாரத்தை தொடர்ந்து போதை பொருட்கள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி தனியார் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் உடன் இணைந்து நடத்தினர்.



பொள்ளாச்சியின் கோவை சாலை, பாலக்காடு சாலை, மத்திய பேருந்து நிலையம், கடைவீதி என முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்த மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதன் பாதிப்புகள் குறித்து போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்களுடன் கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து நகர வீதிகளில் உலா வந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினா்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...