கள்ளக்குறிச்சி விவகாரத்தை மையப்படுத்தி பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கோவை சாலை, பாலக்காடு சாலை, மத்திய பேருந்து நிலையம், கடைவீதி என முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்த மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுதோறும் போதை பொருள் பயன்பாடு தொடர்பாக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தி வருகிறது. இந்த உயிரிழப்பு விவகாரத்தை தொடர்ந்து போதை பொருட்கள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி தனியார் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் உடன் இணைந்து நடத்தினர்.



பொள்ளாச்சியின் கோவை சாலை, பாலக்காடு சாலை, மத்திய பேருந்து நிலையம், கடைவீதி என முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்த மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதன் பாதிப்புகள் குறித்து போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்களுடன் கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து நகர வீதிகளில் உலா வந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினா்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...