கோவை ஊருக்குள் உலா வரும் காட்டு யானைகள்

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில், 10 நாட்களாக நான்கு காட்டு யானைகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி, பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.


கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் உள்ள கிராம பகுதியில் கடந்த 10 நாட்களாக வனப் பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த நான்கு காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இதனைப் அங்கு உள்ள பொதுமக்கள் வனத் துறைகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.



அங்கு வந்த வனத் துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டி செல்கின்றனர். ஆனால் மீண்டும் யானைகள் இரவு நேரங்களில் அப்பகுதிக்கு வருவதால் பொதுமக்கள் வெளியே வருவதற்கு அச்சமடைந்து உள்ளனர். அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த நிலையிலே இரவு நேரத்தில் காட்டு யானைகளை வனத் துறையினர் விரட்டும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.06.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...