எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமி இடையே உட்கட்சி பூசல் - கோவையில் அண்ணாமலை பேட்டி

எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி இடையே உட்கட்சி பூசல் இருப்பதாக தோன்றுகிறது. கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டனர். திமுகவினர் ஆடுகளை வெட்டாமல் என் மீது கை வையுங்கள். அப்பாவி ஆட்டை துன்புறுத்த வேண்டாம் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.


கோவை: டெல்லி செல்வதற்கு முன்பு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்ளை சந்தித்து பேசினார். அப்போத அவர் பேசியாதவது, 2019அம் ஆண்டு அதிமுக ஆளும் கட்சி. பாஜக 303 சீட்டுகள் வாங்கினர். ஆனால் அன்று வரலாறு காணாத தோல்வி கிடைத்தது.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். அதிமுக தனியாக இருந்து ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. எப்படி 30 சீட்டுகள் கிடைக்கும் என எஸ்.பி.வேலுமணிக்கு அவர் பதிலளித்துள்ளார். எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி இடையே உட்கட்சி பூசல் இருப்பதாக தோன்றுகிறது.

பாஜக இருந்தால் 30 முதல் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என வேலுமணி சொல்லுவது உட்கட்சி பூசல் தான். கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு. இல்லை என்றால் ஒரு பேச்சு. அதிமுக கோவையில் அனைத்து எம்.எல்.ஏ இருந்தும் ஏன் வெற்றி பெற வில்லை. கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள்.

பாஜகவிற்கு காலம் வரும். தொண்டர்கள் உணர்ச்சி வசபட வேண்டாம். திமுகவினர் ஆடுகளை வெட்டாமல் என் மீது கை வையுங்கள். அப்பாவி ஆட்டை துன்புறுத்த வேண்டாம். வாக்கு எண்ணும் மையத்திற்கு ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் அவர் வாக்குவாதம் செய்தார்.

கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக செய்து காட்டுவோம். படிப்படியாக தான் வெற்றியை பார்க்க முடியும். அதிகளவில் எஸ்.பி வேலுமணி தவறான புள்ளி விவரங்களை பகிர்ந்துள்ளார்.

இணை அமைச்சர் பதவி ஏற்பதாக கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. கோவை மக்களுக்கு கடமை பட்டுள்ளோம். ஆளும் கட்சிக்கு எதிராக வாக்கு அளித்து உள்ளனர். கோவை மக்களின் வாக்கு எங்களை உற்சாகம் படைத்துள்ளது.

எஸ்.வி.சேகர் யார் என்று எனக்கு தெரியாது. எங்களின் செயல்பாடு தான் 2 இலக்குகளில் வாக்கு வாங்கியுள்ளோம். நடிகர் விஜய் அரசியலுக்கு வருகை என்பதும் புதியவர்களுக்கு மக்கள் முன்னுரிமை கொடுப்பது அதிகம். 2026 கூட்டணி ஆட்சி தான் அமையும். அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்பது நான் பேசுவதிலே தெரியும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...