கோவையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு தலைகாட்டாத அண்ணாமலை..!

பா.ஜ.க. மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




கோவை: நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கோவையில் 24 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.

கோவையில் தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு கட்சி முகவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முகாமிட்டுள்ளனர்.

இவர்களோடு திமுக., அதிமுக.,வேட்பாளர்களான கணபதி ராஜ்குமார் மற்றும் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

ஆனால், காலையில் இருந்தே பா.ஜ.க. மாநில தலைவரும் கோவை தொகுதியின் வேட்பாளருமான அண்ணாமலை வரவில்லை. காலையில் இருந்து நடைபெற்ற ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையில் கூட அண்ணாமலை முன்னிலை வகிக்கவில்லை. இதனால் அவர் கோவையில் இருந்துகொண்டே வாக்கு எண்ணும் மையத்தை எட்டிப்பார்க்கவில்லை என்று கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர். இது பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...