கோவையிலிருந்து அமெரிக்கா, கனடாவிற்கு ஜூன் 2ம் தேதி முதல் ஏர் இந்தியா விமான சேவை தொடக்கம்

டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் கனெக்டிங் பிளைட் மூலம் நியூ ஆர்க், நியூ யார்க், வாஷிங்டன், சிகாகோ, வான்கூவர் மற்றும் டொரோண்டோவிற்கு செல்ல முடியும். டெல்லியிலிருந்து கோவை வந்து சேர விமான சேவை வசதியும் உள்ளது.


கோவை: வருகின்ற ஜூன் 2ம் தேதி முதல் கோவையிலிருந்து டில்லி மற்றும் மும்பை கனெக்டிங் பிளைட் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு செல்லக்கூடிய விமான சேவை வசதியை பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா ஆரம்பிக்க உள்ளதாக அண்மையில் தெரிவித்துள்ளது.

அதன்படி ஜூன் 2ஆம் தேதி முதல் அமெரிக்காவில் உள்ள ஐந்து நகரங்களான நியூ ஆர்க் (New Ark), நியூயார்க் (New York), வாஷிங்டன், சிகாகோ மற்றும் சான் பிரான்சிஸ்கோவுக்கும், கனடாவில் உள்ள வான்குவார் மற்றும் டோராண்டோ ஆகிய நகரங்களுக்கும் டெல்லி மற்றும் மும்பை வழியாக கோவையிலிருந்து செல்ல முடியும்.

ஏர் இந்தியாவின் புதிய நான்-ஸ்டாப் கோவை-டெல்லி விமான சேவை, கோவையிலிருந்து (திங்கள் - வெள்ளி மற்றும் ஞாயிறுகளில்) மாலை 6.45 மாணிக்கு புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு டெல்லி வந்து சேரும்.









டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் கனெக்டிங் பிளைட் மூலம் நியூ ஆர்க், நியூ யார்க், வாஷிங்டன், சிகாகோ, வான்கூவர் மற்றும் டொரோண்டோவிற்கு செல்ல முடியும். பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாகவே டெல்லி வர விமான சேவைகள் உள்ளது. பின்னர் டெல்லியிலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு கோவை வந்து சேரவும் விமான சேவை உள்ளது.

அதேபோல கோவையில் இருந்து மும்பை நகருக்கு தினசரி காலை 9 மணிக்கு விமான சேவை உண்டு. காலை 9 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் விமானம் காலை 10.50 மணிக்கு மும்பையில் தரை இறங்கும்.

மும்பையில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகரத்துக்கு ஏர் இந்தியாவின் கனெக்டிங் பிளைட் மூலம் செல்ல முடியும். அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் வழியாகவே மும்பை வரவும் முடியும்.

பின்னர் மும்பையில் இருந்து காலை 6.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் புறப்பட்டு காலை 8.25 மணிக்கு கோவை வந்து சேர்ந்திடலாம். இதனால் இனி கோவையில் இருந்து 7 வெளிநாட்டு நகரங்களுக்கு எளிமையாக செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...