தாராபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் இரண்டு சிறுவர்கள் கைது

தாராபுரத்தில் நட்பாக பழகி பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு சிறுவர்களை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்து சிறார் மையத்தில் சேர்த்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 14,வயது சிறுமிக்கு, 3 மாதமாக பல விதங்களால் பாலியல் தொல்லை கொடுத்த, இரண்டு சிறுவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

தாராபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிறுவனும், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுவனும், சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இரண்டு சிறுவர்களும் சேர்ந்து 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தன் தாயாரிடம் கூறவே தாயார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். அப்போது அரசு மருத்துவர்கள் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் செல்லம் நேரில் வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது இரண்டு சிறுவர்களும் தனக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக சிறுமி தெரிவித்தார். இதனை அடுத்து சிறுவர்கள் இருவரையும் கைது செய்த ஆய்வாளர் செல்லம், இருவரும் சிறுவர்களாக இருப்பதால் அவர்கள் இருவரையும் திருப்பூரில் உள்ள சிறார் மையத்திலும் சேர்த்தனர்.

சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...