கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநரிடம் மனு

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பிக்கும்போது, எந்தவித விதிகளையும் கடைப்பிடிக்காமல் சோ்க்கை நடத்த வேண்டும் என்று கோவையைச் சோ்ந்த மாநில ஆதிதிராவிடா் நலக்குழு முன்னாள் உறுப்பினா் செல்வகுமார், உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் வெங்கடேசன், சமூக ஆா்வலா் எஸ்.சுபாஷ் ஆகியோர் சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநரிடம் மனு அளித்தனர்.


கோவை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயம் என்ற அடிப்படையில் எஸ்சி, எஸ்டியினருக்கு ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவையைச் சோ்ந்த மாநில ஆதிதிராவிடா் நலக்குழு முன்னாள் உறுப்பினா் எஸ்.செல்வகுமார், உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் வெங்கடேசன், சமூக ஆா்வலா் எஸ்.சுபாஷ் ஆகியோர் சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மனிடம் நேற்று மே.24 மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் கீழ் அனைத்து தனியார், சுயநிதி, சிறுபான்மையின பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு வகுப்பில் 25 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். மேற்படி சட்டத்தின்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயம் என்ற அடிப்படையில் எஸ்சி, எஸ்டியினா் உள்ளனா்.

மேலும், தூய்மைப் பணியாளா்கள், ஆதரவற்ற விதவைகளின் குழந்தைகள் போன்றோரும் இந்த பிரிவில் அடங்குவா். இந்த சட்டத்தின்படி மேற்கண்ட பிரிவைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கும்போது, எந்தவித விதிகளையும் கடைப்பிடிக்காமல் சோ்க்கை நடத்த வேண்டும். ஆனால், பல பள்ளிகளில் சிறப்புப் பிரிவினருக்கு நேரடி சோ்க்கை நடத்தாமல், பொதுப்பிரிவில் அந்த இடங்களை வைத்துவிடுவதால் சிறப்புப் பிரிவினருக்கான சலுகை மறுக்கப்படுகிறது. இதனால் இந்த சட்டத்தின் நல்ல நோக்கம் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. எனவே இது தொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...