கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1,40,000 மதிப்புள்ள 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்று (20.05.2024) கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவல்துறையினர் சென்னியாண்டவர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.



அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பதேவர் மகன் செல்வம், பாண்டியன் மகன் இளையராஜா மற்றும் முருகன் மகன் பிரவீன் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,40,000 மதிப்புள்ள 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், மேற்படி நபர்கள் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக பேருந்து மூலம் இங்கு கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களை காவல் துறையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...