கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1,40,000 மதிப்புள்ள 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்று (20.05.2024) கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவல்துறையினர் சென்னியாண்டவர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.



அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பதேவர் மகன் செல்வம், பாண்டியன் மகன் இளையராஜா மற்றும் முருகன் மகன் பிரவீன் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,40,000 மதிப்புள்ள 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், மேற்படி நபர்கள் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக பேருந்து மூலம் இங்கு கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களை காவல் துறையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...