மழை வேண்டி வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் சிறப்பு பூஜை

இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டாக அமர்ந்து சிவநாமம் மற்றும் மந்திரங்கள் ஓதி கூட்டு பிராத்தனை செய்தனர். பின்னர், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, தேங்காய், பழங்கள் மற்றும் பூமாலை உள்ளிட்டவற்றை கொடுத்து மழை வேண்டி விருந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை செய்தனர்.


கோவை: கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதற்காக கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வர சுவாமி திருக்கோயிலில் கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பாக மழை வேண்டி சிறப்பு பூஜை மற்றும் கூட்டு பிராத்தனை நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சிக்கு கோட்ட செயலாளர் உருவை பாலன் தலைமை தாங்கினார். இந்த பூஜையில் கலந்துக்கொண்டவர்கள் கூட்டாக அமர்ந்துசிவநாமம் மற்றும் மந்திரங்கள் ஓதி கூட்டு பிராத்தனை செய்தனர். தொடர்ந்து வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, தேங்காய், பழங்கள் மற்றும் பூமாலை உள்ளிட்டவைகளை கொடுத்து விருந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இந்த சிறப்பு பூஜையில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய் கார்த்திக், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன், மாவட்ட பொறுப்பாளர்கள் படையப்பா, செல்வம், அசோக், முருகானந்தம், முருகன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...