செல்வபுரத்தில் கொலை செய்யும் திட்டத்துடன் சென்ற 4 பேர் கைது - போலீசார் நடவடிக்கை

வெங்கடேஷ் என்பவரின் தங்கையின் கணவரை கொலை செய்ய சென்று கொண்டிருந்த 4 பேரையும் செல்வபுரம் போலீசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் நேற்று மே.3 செல்வபுரம் சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

அவர்கள் ஒருவரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் செல்வபுரம் வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்த சதீஷ் (45) சொக்கம்புதூர் ரோடு, கிருஷ்ணா நகரை சேர்ந்த சசிகுமார் (34), சுண்டக்கா முத்தூர்சிவக்குமார் (34) பி. என்.புதூர், கோகுலம் காலனி வெங்கடேஷ் (52) என்பது தெரியவந்தது.

இவர்கள் வெங்கடேஷ் என்பவரின் தங்கையின் கணவரை கொலை செய்ய சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...