மே தினத்தை முன்னிட்டு உடுமலையில் எஐடியுசி மற்றும் சிஐடியு சார்பில் பொதுக்கூட்டம் - தொண்டர்கள் பங்கேற்பு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக அளவு பணத்தை செலவு செய்துள்ளார். மக்கள் ஒருபோதும் மோடியை தேர்ந்து எடுக்க மாட்டார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் மோகன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எஐடியுசி மற்றும் சிஐடியு சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெங்கிட கிருஷ்ணா சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். திருப்பூர் மாவட்ட தலைவர் மோகன் சிறப்புரை ஆற்றினார்.



அப்போது மோகன் பேசியாதவது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக அளவு பணத்தை செலவு செய்துள்ளார். மக்கள் ஒருபோதும் மோடியை தேர்ந்து எடுக்க மாட்டார்கள் என பேசினர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போன்று உடுமலை நகராட்சி அலுவலகத்தில் முன்பு சிஐடியு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எல்லம்மாள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஜெகதீசன், சிஜடியூ தலைவர் கனகராஜ், சிபிஐஎம் உடுமலைநகரச் செயலாளர் பாலதண்டபாணி ரங்கநாதன் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டங்களை யொட்டி உடுமலை போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....