பொள்ளாச்சியில் வாக்கு இயந்திரத்தை பார்வையிட அனுமதி மறுப்பு - போலீசாருடன் திமுக வேட்பாளர் வாக்குவாதம்

வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்றே பின்னரே உள்ளே செல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் போலீசாருடன் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரம் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட சென்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி உள்ளிட்ட தலைமை முகவர் ஆகியோரை போலீசார் அனுமதிக்கவில்லை.



வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்றே பின்னரே உள்ளே செல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர்.



இதனால் போலீசாருக்கும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி வாங்கிய பின்னர் திமுக வேட்பாளர் ஈஸ்வர சுவாமி மற்றும் தலைமை முகவர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.



பின்னர் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்கு இந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதாகவும், தேர்தல் ஆணையம் நல்ல பாதுகாப்பு அளித்து இருப்பதாகவும் தெரிவித்த அவர், வாக்கு இயந்திரம் வைக்கபட்ட இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றும் ஈஸ்வரசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...