மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பு அறையில் கோவை கலெக்டர் ஆய்வு

மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார். கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா? என அங்கிருந்த போலீசாரிடம் அவர் கேட்டறிந்தார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் (ஸ்ட்ராங் ரூமில்) வைக்கப்பட்டுள்ளன.

இங்கு 24 மணி நேரமும் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதுதவிர தமிழ்நாடு சிறப்பு படை போலீசார், உள்ளூர் போலீசார் உள்ளிட்டோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இது தவிர சீல் வைக்கப்பட்ட அறை உள்பட கல்லூரி முழுவதும் 265 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபப்ட்டு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் இந்த பாதுகாப்பு அறையை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் இன்று (01.05.24) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா என அங்கிருந்த போலீசாரிடம் அவர் கேட்டறிந்தார்.

Newsletter

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...