மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜ் பேச்சுவார்த்தை - போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜடையம்பாளையம் ஊராட்சி மக்கள்

சீரான குடிநீர் கேட்டு இரண்டாவது நாளாக மேட்டுப்பாளையம் - சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.


கோவை: மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி, காரமடை, ஜடையம்பாளையம் ஊராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து ஆலங்கொம்பு பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் நேற்று (ஏப்ரல்.29) காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



பின்னர் தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் மற்றும் ஊராட்சி தலைவர் ஆர்.கே.பழனிச்சாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் சுமூக முடிவு எட்டியதையடுத்து கலைந்து சென்றனர்.



இந்த நிலையில் நேற்று போலீசார், வருவாய்த்துறையினர் உடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய பலனளிக்காததால் இன்று (ஏப்ரல்.30) காலை இரண்டாவது நாளாக அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.



இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மேட்டுப்பாளையம் - சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜ் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர், போராட்டத்தை மக்கள் வாபஸ் பெற்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...