உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு – பொதுமக்கள் தேர்தல் புறக்ணிப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், விவசாயிகளுக்கு மறுபயிர் கடன் வழங்காத காரணத்தினாலும் தேர்தலை புறக்கணிப்பாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடைபெற்றது. இந்த நிலையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், விவசாயிகளுக்கும் மறுபயிர் கடன் வழங்காமல் காலதாமதம் பண்ணுவதை கண்டித்தும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கடந்த வாரம் பேனர் வைத்து கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.



எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறாததால் பொதுமக்களும், விவசாயிகளும் ஒருமனதாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரது சொத்துக்களையும் முடக்கம் செய்ய வேண்டும் எனவும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், அதனால் தேர்தல் புறக்கணிப்பை முடிவு செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...