கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு..!

தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், பாஜக தலைவர் அண்ணாமலை மீது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  முன்னதாக, திமுகவினரை தாக்கிய சம்பவத்தில், 4 பாஜகவினர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: தேர்தல் நடத்தை விடுதியின் படி இரவு 10 மணிக்கு மேல் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்ற விதிமுறையை மீறி பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், வேட்பாளர் அண்ணாமலை மீதுவழக்குப் பாய்ந்துள்ளது. 

நேற்று இரவு வார்டு 28 சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜக வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும், விதிமீறலை தட்டிக் கேட்க சென்ற திமுகவினரை, பாஜகவினர் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை 

ஏற்படுத்தியுள்ளது. 



இந்த நிலையில், வன்முறையை அரங்கேற்றிய பாஜகவினர் மீது தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தி வந்த நிலையில்,இந்திய தண்டனை சட்டம் 294பி, 323, 147 உள்ளிட்ட பிரிவின் கீழ் - சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், அடித்து துன்புறுத்துதல், அநாகரீகமாக வசைபாடுதல் உள்ளிட்ட பிரிவில் ஆனந்தன், மாசாணி, லட்சுமி செந்தில், ரங்கநாதன் உள்ளிட்ட நான்கு பேர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் அதிகாரி அளித்த புகாரின்படி, தேர்தல் நடத்தை விதியை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கு பாய்ந்துள்ளது. 

தோல்வி பயத்தினால், பாஜகவினர் இடையூறு செய்ய திட்டமிட்டுள்ளனரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது என்று கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...