தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை - பொள்ளாச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை

அதிமுகவை உடைக்க நினைத்த மு.க.ஸ்டாலின் கனவு உடைக்கப்பட்டது. தேர்தல் என்ற போரில் எதிரிகளை விரட்டி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேயனை ஆதரித்து இன்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் உள்ள மார்க்கெட் ரோட்டில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய அவர், அதிமுகவை உடைக்க நினைத்த மு.க.ஸ்டாலின் கனவு உடைக்கப்பட்டது. தேர்தல் என்ற போரில் எதிரிகளை விரட்டி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி இது யாராலும் எதுவும் செய்ய முடியாது.



ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு கேரளா இரு மாநில அரசுகள் பேசி தீர்க்கும் திட்டம். இது எப்படி மத்திய அரசு தலையிட முடியும். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை. அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை ஒரே மேடையில் நின்று மு.க.ஸ்டாலின் பேச தயாரா என்று தேர்தல் பரப்பரை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். பேட்டி கொடுத்து மக்களை ஈர்த்து வாக்குளை பெற முயற்சி செய்வதாக அண்ணாமலை மீது அவர் மறைமுகமாக சாடினார்.



இந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், உடுமலை ராதாகிருஷ்ணன், அமுல் கந்தசாமி, மகேந்திரன் மற்றும் பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...