பெரியநாயக்கன்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு 12 அடி ரோஜா மாலையை கிரேன் மூலம் அணிவித்து வரவேற்பு

பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் உடன் இணைந்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு 12 அடி ரோஜா மாலையை கிரேன் மூலம் அணிவித்து 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர்.



கோவை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ இன்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் ஆதரவு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.



இதில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது சிங்கை ராமச்சந்திரனுக்கு 12 அடி ரோஜா மாலையை கிரேன் மூலம் அணிவித்து 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர்.



அப்போது பேசிய ராமச்சந்திரன் நான் வெளியூர்காரன் இல்லை. உங்கள் ஊர்க்காரன். நடுத்தர குடும்பத்தைச் சேர்தவன். போன் செய்தால் எடுப்பேன் மிஸ்டுகால் இருந்தாலும் உடனே கூப்பிடுவேன். மத்தியில் யார் பிரதமர் ஆனாலும் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் கோவைக்கு தேவைக்குத் தேவையானதை போராடி பெற்று தருவேன் என்றார்

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...