கோவை விஜயா வாசகர் வட்டத்தின் 2024-ஆம் ஆண்டுக்கான உலக புத்தக தின விருதுகள் அறிவிப்பு

ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளா் எஸ்.சங்கரநாராயணன் (சென்னை), புதுமைப்பித்தன் விருதுக்கு எழுத்தாளா் மயிலன் எ.சின்னப்பன் (திருச்சி), மீரா விருதுக்கு கவிஞா் மா.ஸ்டாலின் சரவணன் (புதுக்கோட்டை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை விஜயா வாசகா் வட்டத்தின் 2024-ஆம் ஆண்டுக்கான உலக புத்தக தின விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து விஜயா பதிப்பக நிறுவனா் மு.வேலாயுதம் (மார்ச்.19) கூறியிருப்பதாவது, உலக புத்தக தினத்தை (ஏப்ரல் 23) முன்னிட்டு ஆண்டுதோறும் கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகா் வட்டம் சார்பில் எழுத்தாளா்கள் ஜெயகாந்தன், மீரா, புதுமைப்பித்தன் ஆகியோரின் பெயரால் எழுத்தாளா்களுக்கு விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர சிறந்த விற்பனையாளருக்கு வானதி விருதும், சிறந்த நூலகருக்கு சக்தி வை.கோவிந்தன் விருதும் வழங்கப்படுகிறது.

2024-ஆம் ஆண்டுக்கான விஜயா வாசகா் வட்ட விருதுகளுக்கான எழுத்தாளா்களைத் தோ்வுக் குழு தோ்ந்தெடுத்துள்ளது. அதன்படி ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளா் எஸ். சங்கரநாராயணன் (சென்னை), புதுமைப்பித்தன் விருதுக்கு எழுத்தாளா் மயிலன் எ.சின்னப்பன் (திருச்சி), மீரா விருதுக்கு கவிஞா் மா.ஸ்டாலின் சரவணன் (புதுக்கோட்டை) ஆகியோர் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சிறந்த புத்தக விற்பனையாளருக்கான வானதி விருது கும்பகோணம் ஸ்ரீ மார்க்கண்டேயா புக் கேலரி ஜே.கல்யாணசுந்தரத்துக்கும், சிறந்த நூலகருக்கான சக்தி வை.கோவிந்தன் விருது, சென்னை திருவொற்றியூா் முழுநேர அரசு கிளை நூலகத்தின் இரண்டாம் நிலை நூலகா் பா.பேனிக் பாண்டியனுக்கும் வழங்கப்பட உள்ளது.

ஜெயகாந்தன் விருதுக்கு ரூ.1 லட்சம், புதுமைப்பித்தன், மீரா, வானதி, சக்தி வை.கோவிந்தன் விருதுகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. 9-ஆவது ஆண்டாக நடைபெற இருக்கும் விஜயா வாசகா் வட்ட விருதுகள் வழங்கும் விழா, உலக புத்தக தினமான ஏப்ரல் 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ராஜ வீதி விஜயா பதிப்பகத்தின் மேல்தளத்தில் உள்ள ரோஜா முத்தையா அரங்கில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...