தாராபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை - நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் தொடங்கி வைப்பு

2-வது வார்டு நஞ்சியம்பாளையம் தெரு புதூர் பகுதியில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழை நீர் வடிகால், ரூ.3 லட்சம் மதிப்பில் நீர்த் தேக்க தொட்டி கட்டிடம் உள்ளிட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான பணிகளை நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சி பகுதியில் புதிய நூலக கட்டிடம், மழை நீர் வடிகால் மற்றும் குடிநீர் தொட்டி அமைக்க ரூ.55 லட்சம் மதிப்பிலான புதிய பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இதில் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



இதனை தொடர்ந்து நகராட்சி 4 மற்றும் 7 ஆகிய வார்டு பகுதிகளில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புதிய டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2-வது வார்டு நஞ்சியம்பாளையம் தெரு புதூர் பகுதியில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழை நீர் வடிகால் அமைப்பதற்கும், புதியகுடிநீர் தொட்டி, ரூ.3 லட்சம் மதிப்பில் நீர்த் தேக்க தொட்டி கட்டிடம் உள்ளிட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான பணிகளை நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அப்போது நகர செயலாளர் எஸ்.முருகானந்தம், நகர துணை செயலாளர்கள் வி.கமலக்கண்ணன், செலின் பிலோமினா, 4-வது வார்டு நகர மன்ற உறுப்பினர்கள் ராசாத்திபாணடியன், முபாரக் அலி, 4-வது வார்டு நிர்வாகி இல.மணி, தில்லை முத்து, 3-வது வார்டு செயலாளர் மோகன்ராஜ், பிரதிநிதி மணிவேல், துணைச் செயலாளர் சோமு, பொருளாளர் ஜெயராஜ், அவைதலைவர் கிருஷ்ணமூர்த்தி, மருதமுத்து, ஓவியர் மின்னல், மணி, சண்முகம், திருநாவுக்கரசு, சாரதி, குணசேகரன், பெரியசாமி, தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...