தாராபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை - நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் தொடங்கி வைப்பு

2-வது வார்டு நஞ்சியம்பாளையம் தெரு புதூர் பகுதியில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழை நீர் வடிகால், ரூ.3 லட்சம் மதிப்பில் நீர்த் தேக்க தொட்டி கட்டிடம் உள்ளிட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான பணிகளை நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சி பகுதியில் புதிய நூலக கட்டிடம், மழை நீர் வடிகால் மற்றும் குடிநீர் தொட்டி அமைக்க ரூ.55 லட்சம் மதிப்பிலான புதிய பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இதில் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



இதனை தொடர்ந்து நகராட்சி 4 மற்றும் 7 ஆகிய வார்டு பகுதிகளில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புதிய டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2-வது வார்டு நஞ்சியம்பாளையம் தெரு புதூர் பகுதியில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழை நீர் வடிகால் அமைப்பதற்கும், புதியகுடிநீர் தொட்டி, ரூ.3 லட்சம் மதிப்பில் நீர்த் தேக்க தொட்டி கட்டிடம் உள்ளிட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான பணிகளை நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அப்போது நகர செயலாளர் எஸ்.முருகானந்தம், நகர துணை செயலாளர்கள் வி.கமலக்கண்ணன், செலின் பிலோமினா, 4-வது வார்டு நகர மன்ற உறுப்பினர்கள் ராசாத்திபாணடியன், முபாரக் அலி, 4-வது வார்டு நிர்வாகி இல.மணி, தில்லை முத்து, 3-வது வார்டு செயலாளர் மோகன்ராஜ், பிரதிநிதி மணிவேல், துணைச் செயலாளர் சோமு, பொருளாளர் ஜெயராஜ், அவைதலைவர் கிருஷ்ணமூர்த்தி, மருதமுத்து, ஓவியர் மின்னல், மணி, சண்முகம், திருநாவுக்கரசு, சாரதி, குணசேகரன், பெரியசாமி, தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...