மீண்டும் பாஜக ஆட்சி அமைய பொதுமக்கள் விருப்பம் - திருப்பூரில் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்வேல் பேட்டி

பல்லடத்திற்கு பிரதமர் மோடி வந்து சென்ற பிறகு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருவதாக மாவட்ட தலைவர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான செந்தில்வேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சி சிறப்பான முறையில் இருந்ததாகவும், மீண்டும் அதே ஆட்சி அமைய வேண்டும் என பொதுமக்கள் விரும்புவதாகவும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோரிக்கைகள் பாஜகவின் தேசிய தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு கட்சியின் மத்திய தலைமைக்கு அனுப்ப இருப்பதாகவும், மேலும் 10 ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகளையும் கிராமங்கள் தோறும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு பின்பு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும், தினந்தோறும் கட்சியினர் இணைந்து வரக்கூடிய நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் விரைவில் மிகப்பெரிய இணைப்பு விழா நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...