கோவை மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தொடக்கம்

மேட்டுப்பாளையம் நகராட்சி வார்டு எண்-2, 8, 14, 24, 28, 29, 30 ஆகியவற்றில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-2025 கீழ் ரூ.3 கோடி 94 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் நகராட்சி, வார்டு எண்-20, 27, 32 ஆகியவற்றில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2023-2024 கீழ் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்ள் பயன்பெறும் வகையில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி, வார்டு எண்-2, 8, 14, 24, 28, 29, 30 ஆகியவற்றில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-2025 கீழ் ரூ.3 கோடி 94 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்ள் பயன்பெறும் வகையில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணியை இன்று (மார்ச்.4) நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு 2024-க்கு பயிற்சி வகுப்புகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி, வார்டு எண்-03 மற்றும் 33-ல் ரூ-52.46 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூக கழிப்பறையை பொதுமக்ள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி நந்தவனத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.22.28 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள படித்துறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார். மேலும் மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

உடன் மாவட்ட கழகச் செயலாளர் தொ.இரவி தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய கழகச் செயலாளர் கல்யாணசுந்தரம், நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள் வடிவு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...