ஊதியூர் பெட்ரோல் பங்க் நிறுத்தம் அருகே பள்ளி மாணவன் பேருந்தில் இருந்து விழுந்து படுகாயம்

பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றபோது உள்ளே இருந்து, படிக்கட்டிற்கு வந்த மாணவன் திடீரெனெ நிலை தடுமாறி பேருந்தில் இருந்து சாலையில் விழுந்துள்ளார். இதில் மாணவனுக்கு தலை, முகம், மூக்கு, கை ஆகிய பகுதிகளில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த குள்ளம்பாளையத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. ஊதியூர் பகுதியை சேர்ந்த சண்முகம் கூலித்தொழிலாளியின் மகன் அபிஷேக்குமார் வயது 16. இந்த சிறுவன் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் இன்று மாலை பள்ளி வேலை முடிந்தவுடன் காங்கேயம் பேருந்து பணிமனைக்கு சொந்தமான K5 என்ற பேருந்தில் குள்ளம் பாளையத்தில் இருந்து ஊதியூர் பெட்ரோல் பங்க் ஸ்டாப்பில் இறங்கி வீடு செல்வது வழக்கம்.

அதே போல் இன்றும் அந்த பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றபோது படிக்கட்டிற்கு வந்துள்ளார். பின்னர் திடீரெனெ படிக்கட்டில் நிலை தடுமாறி சாலை விழுந்துள்ளார். உடனே சகமாணவர்கள் சத்தமிடவே பேருந்தை நிறுத்தி பார்க்கையில் மாணவனுக்கு தலை, முகம், மூக்கு, கை ஆகிய பகுதிகளில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டிருந்தது. வலியால் மாணவனும் துடிக்க அருகில் இருந்தவர்கள் அந்த வழியாக வந்த வாகனத்தில் ஏற்றி காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பேருந்தில் செல்லும் மாணவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து நின்ற பின்னரே படிக்கட்டு பகுதிக்கு வரவேண்டும் அதற்க்கு முன்னாள் படிக்கட்டிற்கு வந்தால் கை தவறியோ அல்லது படிக்கட்டுகள் வலுக்கிவிட்டு இதுபோல் விபத்துக்கள் ஏற்படுகின்றது.

அதே போல் பேருந்து நடத்துனர்கள் மாணவர்களை படிக்கட்டுக்களில் நிற்பதை அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....