கோவை மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் சுமார் 31 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (மார்ச் 3) நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், கோயில்கள், டோல்கேட், பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்கள், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என 1088 கிராமப்புற மையங்கள், 497 நகா்ப்புற மையங்கள் என மொத்தம் 1,585 மையங்கள் மற்றும் நடமாடும் குழுக்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து நாளை (மார்ச் 3) வழங்கப்படவுள்ளது.

பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் சுமார் 31 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

இம்முகாம்களுக்குத் தேவையான சொட்டு மருந்து அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தயார் நிலையில் உள்ளது. இப்பணியில் சுகாதாரத் துறையினா், அங்கன்வாடிப் பணியாளா்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளா்கள், ரோட்டரி சங்கத்தினா், தன்னார்வலா்கள் ஈடுபடவுள்ளனா். அரசால் வழங்கப்படும் இந்த போலியோ சொட்டு மருந்து தரமானது, பாதுகாப்பானது மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகாரம் பெற்றதாகும்.

எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து அளித்திருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போலியோ சொட்டு மருந்து அளித்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...