தொண்டாமுத்தூரில் விளைநிலங்களில் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம் - விவசாயிகள் புகார்

தீத்திபாளையத்தில் மயில்சாமி கவுண்டர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்த 30க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள், சின்ன வெங்காய பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை: தொண்டாமுத்தூரில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல வகையில் கையாண்டும் இதுவரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. கோவை தீத்திபாளையம் மயில்சாமி கவுண்டர் என்பவர் தோட்டத்தில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் சின்ன வெங்காய நடவு காட்டில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



60 நாட்கள் ஆன சின்ன வெங்காயம் ஒரு ஏக்கர் பரப்பளவில் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாய சங்கத்தின் நிர்வாகிகள், தொண்டாமுத்தூர் விவசாயிகள் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...