கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சலம் அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.


கோவை: கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேரோட்டம்இன்று நடைபெற்றது. கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் உள்ளது. இந்த கோவில் தேர் திருவிழா கடந்த 20ஆம் தேதி குடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை ஒட்டி தினமும் பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. திருவிழாவின் ஒன்பதாவது நாளான்று இன்று தேரோட்டம் நடைபெற்றது. இது ஒட்டி இன்று காலை நாலு மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருள் நடைபெற்றது.

பிறகுமதியம் 2 மணி அளவில் தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இந்த தேரோட்டத்தில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சலம் அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.

இதில் முக்கிய பெருமகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவையில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேர் செல்லும் வழியில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டன. கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை ஒட்டி ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, கற்பகம் கல்லூரி வீதி, வைசால் வீதி, எம்பட்டி காலனி, உக்கடம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டது.

ஆங்காங்கே பொதுமக்களுக்கு உணவு வகைகள், நீர் மோர் என பல வகைகள் கொடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கோவை ஒப்பணக்கார வீதி பகுதியில் உள்ள அத்தார் ஜமாத் பள்ளிவாசல் முன்புறம் பள்ளிவாசலில் நிர்வாகிகள் தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...