கோவை மாநகர காவல்துறையினருக்கு ரோந்து பணிகளுக்காக எலக்ட்ரிக் ஆட்டோக்கள்

ரோந்து பணிகளுக்காக 5 எலக்ட்ரானிக் ஆட்டோக்களை தனியார் நிறுவனங்கள் அர்ப்பணித்துள்ளதாகவும், முதல் கட்டமாக இந்த ஆட்டோக்களை காவல் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டு ரோந்து பணியை தீவிர படுத்த உள்ளதாகவும் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ரோந்து பணிகளுக்காக எலக்ட்ரிக் ஆட்டோக்கள் தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இன்று (பிப்.22) துவக்கி வைத்தார்.

இந்த எலக்ட்ரிக் ஆட்டோவில் சைரன் கேமரா வசதிகள் உள்ளது. மேலும் இதில் ஆறு பேர் அமர்ந்து செல்லலாம். இதனை மாநகரில் நெரிசல் நிறைந்த பகுதிகளில் பயன்படுத்த இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதல்கட்டமாக 5 ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகர காவல் ஆணையர், ரோந்து பணிகளுக்காக 5 எலக்ட்ரானிக் ஆட்டோக்களை தனியார் நிறுவனங்கள் அர்ப்பணித்துள்ளதாகவும், முதல் கட்டமாக இந்த ஐந்து ஆட்டோக்களை காவல் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டு ரோந்து பணியை தீவிர படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். இதில் பல்வேறு வசதிகள் இருப்பதாகவும் காவல்துறைக்கு பயன்படும் வகையில் இருக்கும் எனவும் கூறினார்.

இவற்றை வடவள்ளி, கரும்புக்கடை உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்ப இருப்பதாகவும், காவலர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் ஆட்டோவிலிருந்து பொதுமக்களிடம் பேசுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், குறுகலான பாதைகளில் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஸ்ரீ மகா சக்தி ஆட்டோ ஏஜென்சி தன்னார்வ தொண்டு அமைப்பினர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...