மருதமலை கோவிலில் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடக்கம்

மருதமலை கோயிலில் மலைமேல் பின்புறம் உள்ள ஜட்ஜ் மண்டபத்தினை மாற்றி கற்களால் ஆன இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி மற்றும் திருக்கோயிலில் கொடி மரத்தின் அருகில் உள்ள தகர சீட்டினை அகற்றி விட்டு ஆர்.சி.சி.வசந்த மண்டபம் கட்டும் பணியினை காணொலிக் காட்சி வாயிலாகத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.02.2024) இந்து சமய அறநிலையத்துறை மூலம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் மலைமேல் பின்புறம் உள்ள ஜட்ஜ் மண்டபத்தினை மாற்றி கற்களால் ஆன இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி மற்றும் திருக்கோயிலில் கொடி மரத்தின் அருகில் உள்ள தகர சீட்டினை அகற்றி விட்டு ஆர்.சி.சி.வசந்த மண்டபம் கட்டும் பணியினை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், இந்து சமய அறநிலையங்கள் துறை இணை ஆணையர் ரமேஷ், துணை ஆணையர் ஹர்ஷினி, மண்டலகுழு தலைவர் தெய்வயாணை தமிழ்மறை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....