மோடி அரசின் தேர்தல் பத்திர மெகா ஊழலை கண்டித்து பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்

2022 -2023 ஆண்டில் மட்டுமே தேர்தல் பத்திரத்தின் மூலம் ரூபாய் 20,120 கோடியை பாஜக அரசு பெற்றுள்ளது. இதனை உச்ச நீதிமன்றம் மோடி அரசின் தேர்தல் பத்திரங்கள், அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பு வழங்கியுள்ளது என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளூர் திடலில் மத்திய அரசு மோடியின் ஆட்சியில் தேர்தல் பத்திர மெகா ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்றது.



இதில் பாஜக சார்ந்த கம்பெனிகளுக்கு சலுகைகள் வழங்கி அதற்கு கைமாறாக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.5,270 கோடி வசூல் செய்து தேர்தல் பத்திர திட்டங்களை காங்கிரஸ் கட்சி எதிர்த்த போதும் இந்தத் தொகை யாரிடம் பெறப்பட்டது என்பதை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்க முடியாத அளவிற்கு சட்ட திருத்தத்தை மோடி அரசு செய்துள்ளது. 2022 -2023 ஆண்டில் மட்டுமே தேர்தல் பத்திரத்தின் மூலம் ரூபாய் 20,120 கோடியை பெற்றுள்ளது.

இதனை உச்ச நீதிமன்றம் மோடி அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே மோடி அரசின் தேர்தல் பத்திரமான ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகரத் தலைவர் செந்தில்குமார், மாநில பொது குழு உறுப்பினர் ஜோதிமணி, மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல் ரவி உட்பட ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...