மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை – கோவை ஆட்சியர் உறுதி

கரப்பாடி பிரிவு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வீட்டுமனை பட்டா, நத்தம், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 597 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 23 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவையில் கடந்த மாதம் மக்களுடன் முதல்வர் முகாமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள கரப்பாடி பிரிவு பகுதியில் தனியார் மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் வீட்டுமனை பட்டா, நத்தம், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 597 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 23 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



இதில் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அளித்த பேட்டியின் போது, கடந்த மாதம் முதல்வரின் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 19, ஆயிரம் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இதில் 50 சதவீத மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு மனுக்கள் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வார காலத்திற்குள் அனைத்து மனுக்கள் மீதும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த மாவட்ட ஆட்சித் தலைவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு சென்ற பொதுவான மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...