ராமன் மற்றும் அனுமன் பற்றி சமூக வலைதளத்தில் கோவையை சேர்ந்த சாந்தகுமார் என்பவர் சர்ச்சை பதிவு

தமிழகத்தில் ராமனுக்கும் அனுமனுக்குமான மரியாதை என்பது ராமன் மற்றும் அனுமான் பிச்சை எடுப்பது போன்றது என்பதை குறிக்கும் புகைப்படத்தை சாந்தகுமார் என்பவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கின்றார்.


கோவை: கோவை ஆர்எஸ்புரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் சமூக வலைதளத்தை பார்த்துக் கொண்டிருந்த பொழுது அதில் இரு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் சாந்தகுமார் என்பவர் பதிவிட்ட பதிவை பார்த்திருக்கின்றார்.



கலவரங்களின் மூலம் பிணங்களை குறித்து அதன் மேல் கட்டப்படும் ஆலயம், ராமன் இருந்தால் இந்த ஆலயத்தில் வசிக்க மாட்டான் என சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.



அதேபோன்று தமிழகத்தில் ராமனுக்கும் அனுமனுக்குமான மரியாதை என ராமன் மற்றும் அனுமான் பிச்சை எடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கின்றார்.



இருப்பதை இழந்த கடவுளாலும் எதையும் புடுங்க இயலவில்லை மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி கேடுகெட்ட கொடூர ஆட்சியை தக்க வைக்க முயல்கிறார்கள் மதவெறி ஆட்சியாளர்கள்" என சாந்தகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.

ஐ.பி.சி. 295A - எந்த ஒரு வகுப்பினரின் மத உணர்வுகளையும், அதன் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள் செய்த குற்றன் என்பதனை அடிப்படையாக வைத்த பிரிவின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...