ராமன் மற்றும் அனுமன் பற்றி சமூக வலைதளத்தில் கோவையை சேர்ந்த சாந்தகுமார் என்பவர் சர்ச்சை பதிவு

தமிழகத்தில் ராமனுக்கும் அனுமனுக்குமான மரியாதை என்பது ராமன் மற்றும் அனுமான் பிச்சை எடுப்பது போன்றது என்பதை குறிக்கும் புகைப்படத்தை சாந்தகுமார் என்பவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கின்றார்.


கோவை: கோவை ஆர்எஸ்புரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் சமூக வலைதளத்தை பார்த்துக் கொண்டிருந்த பொழுது அதில் இரு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் சாந்தகுமார் என்பவர் பதிவிட்ட பதிவை பார்த்திருக்கின்றார்.



கலவரங்களின் மூலம் பிணங்களை குறித்து அதன் மேல் கட்டப்படும் ஆலயம், ராமன் இருந்தால் இந்த ஆலயத்தில் வசிக்க மாட்டான் என சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.



அதேபோன்று தமிழகத்தில் ராமனுக்கும் அனுமனுக்குமான மரியாதை என ராமன் மற்றும் அனுமான் பிச்சை எடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கின்றார்.



இருப்பதை இழந்த கடவுளாலும் எதையும் புடுங்க இயலவில்லை மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி கேடுகெட்ட கொடூர ஆட்சியை தக்க வைக்க முயல்கிறார்கள் மதவெறி ஆட்சியாளர்கள்" என சாந்தகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.

ஐ.பி.சி. 295A - எந்த ஒரு வகுப்பினரின் மத உணர்வுகளையும், அதன் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள் செய்த குற்றன் என்பதனை அடிப்படையாக வைத்த பிரிவின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...