கோவையில் நில அளவை செய்ய லஞ்சம் கேட்ட நில அளவையர் கைது


கோவை மாவட்டம் சூலூரை அடுத்த சுல்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயியான இவர் தனது நிலத்திற்கு பட்டாகேட்டு அப்பகுதி நில அளவையரான சுப்ரமணியிடம் கேட்டுள்ளார். அப்போது, கந்தசாமியின் நிலத்தை அளவை செய்ய சுப்ரமணி ரூ.14 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கந்தசாமி, கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தார். 

இது குறித்த புகாரின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டை லஞ்ச ஒழிபு போலீசார்  கந்தசாமியிடம் கொடுத்தனர். அந்த நோட்டுகளை நில அளவையரான  சுப்ரமணியனிடம் இன்று கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த போலீசார் சுப்ரமணியனை கையும் களவுமாக கைது செய்தனர்.

தொடர்ந்து, போலீசார் சுப்ரமணியனை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர்.                        

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...