காங்கேயம் நகர கழக அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே, பாரதியார் வீதி, திருவிகநகர், லட்சுமிநகர், மூர்த்திரெட்டிபாளையம், அய்யாசாமி காலனி, களிமேடு, கார்திகைநகர், புலிமாநகர் உட்பட ஏராளமான பகுதிகளில் எம்ஜிஆரின் திருவுருவப்படங்களுக்கு நிர்வாகிகள் மலர்த்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்டம் காங்கேயம் நகர கழக அதிமுக சார்பில் முன்னாள் முதல்வரும், புரட்சித்தலைவரும் எம்ஜிஆரின் 107 பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த விழா நகர கழக செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. காங்கேயம் நகர கழகம் சார்பில் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் நகர கழக நிர்வாகிகளுடன் இந்த பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே, பாரதியார் வீதி, திருவிகநகர், லட்சுமிநகர், மூர்த்திரெட்டிபாளையம், அய்யாசாமி காலனி, களிமேடு, கார்திகைநகர், புலிமாநகர் உட்பட ஏராளமான பகுதிகளில் திருவுருவப்படங்களுக்கு மலர்த்தூவி மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழக புரட்சித்தலைவி பேரவை மாநில துணைச்செயலாளர் ஆற்றல் அசோக்குமார், மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ஜி.கே.கிஷோர்குமார், மாநகர் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் சி.கந்தசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஏ.பி.துரைசாமி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் என்.பாலகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் எஸ்.செல்வகுமார், நகர கழக அவைத்தலைவர் கே.கே.பழனிச்சாமி, நகர துணை செயலாளர் ஏ.ஏ.பழனிச்சாமி உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...