ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கை - த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கை எனவும், இந்த இடைத்தேர்தல் சவாலான தேர்தலாகவும், சுவராஷ்யமான தேர்தலாகவும் இருக்கும் எனவும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது  உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை நடத்த மாவட்டம் தோறும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு விரைவாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு நிறைய இடங்களை வெல்ல வேண்டும் என்பதே தங்களது விருப்பம் எனவும் அதே வேளையில் ஓருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி  அமைக்கவும் வாய்பிருக்கின்றது எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு பெட்ரோல், டீசலுக்கு வாட்வரியை உயர்த்தி இருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் உடனடியாக உயர்த்தப்பட்ட வாட் வரியை  திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பவானி ஆற்றின்  குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்தில்  மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த அவர் மத்திய அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு  கட்டப்பட்ட தடுப்பணைகளை அகற்ற வேண்டும்  என தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கை என்று தெரித்த அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சவாலான தேர்தலாகவும், சுவராஷ்யமான தேர்தலாகவும் இருக்கும் எனவும் தெரிவித்தார். இனிமேல் வருகின்ற பொதுத்தேர்தல்களில் பெரும்பான்மை எந்த அரசியல் கட்சிக்கும் இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானமானது சபையில் இருக்கும் உறுப்பினர்களை பொறுத்து அமையும் எனவும் ஜி.கே.வாசன் தெரித்தார். மேலு, இனிமேல் தன்னுடைய கூட்டங்கள் பட்டாசு வெடித்தல், சால்வை, பொன்னாடை அணிவித்தல் போன்றவற்றை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கு வலியுறுத்தி இருப்பதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...